ஷேர் ஆட்டோ கட்டணம் குறைப்பு : சேலத்தில் மாற்றி யோசிக்கிறாங்க
Added : ஜன 23, 2018 01:11
சேலம்: தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தியில் உள்ள பயணியரை, தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில், சேலத்தில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம், பாதியாகக்குறைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் ஜன., 20 வரை, குறைந்த பட்ச கட்டணம், எட்டு முதல், 10 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான டிரைவர்கள் கட்டணமாக, 10 ரூபாய் வசூலித்துவந்தனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஐந்து ரோடு, சாரதா கல்லுாரி சாலை வழியாக, அஸ்தம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டிக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணத்தை, உரிமையாளர்கள் குறைப்பு செய்துள்ளனர்.
இது குறித்து, ஷேர்ஆட்டோ டிரைவர்கள்கூறியதாவது: சேலம், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொண்டப்பநாயக்கன்பட்டி வரையிலான, வழித்தடத்தில், 50 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், பயணியர் ஆட்டோக்கள், ேஷர் ஆட்டோவாக இயக்கப்படுகின்றன. இதை போக்குவரத்து துறை அதிகாரிகள், கண்டு கொள்வதில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், பயணியரை எங்கள் பக்கம் இழுப்பதற்காக, கட்டண குறைப்பு செய்துள்ளோம். டவுன் பஸ்சில், குறைந்த பட்ச கட்டணம், எட்டு ரூபாயாக உள்ளதால், எங்களின் ஆட்டோக்கள், ஐந்து ரூபாயில் இயக்கப்படுவதால், பயணியர் மத்தியில், ேஷர் ஆட்டோக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Added : ஜன 23, 2018 01:11
சேலம்: தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தியில் உள்ள பயணியரை, தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில், சேலத்தில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம், பாதியாகக்குறைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் ஜன., 20 வரை, குறைந்த பட்ச கட்டணம், எட்டு முதல், 10 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான டிரைவர்கள் கட்டணமாக, 10 ரூபாய் வசூலித்துவந்தனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஐந்து ரோடு, சாரதா கல்லுாரி சாலை வழியாக, அஸ்தம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டிக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணத்தை, உரிமையாளர்கள் குறைப்பு செய்துள்ளனர்.
இது குறித்து, ஷேர்ஆட்டோ டிரைவர்கள்கூறியதாவது: சேலம், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொண்டப்பநாயக்கன்பட்டி வரையிலான, வழித்தடத்தில், 50 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், பயணியர் ஆட்டோக்கள், ேஷர் ஆட்டோவாக இயக்கப்படுகின்றன. இதை போக்குவரத்து துறை அதிகாரிகள், கண்டு கொள்வதில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், பயணியரை எங்கள் பக்கம் இழுப்பதற்காக, கட்டண குறைப்பு செய்துள்ளோம். டவுன் பஸ்சில், குறைந்த பட்ச கட்டணம், எட்டு ரூபாயாக உள்ளதால், எங்களின் ஆட்டோக்கள், ஐந்து ரூபாயில் இயக்கப்படுவதால், பயணியர் மத்தியில், ேஷர் ஆட்டோக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment