ஜன. 29 பல்கலை பட்டமளிப்பு விழா
Added : ஜன 23, 2018 00:51
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் 51வது பட்டமளிப்பு விழா ஜன., 29 நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகிக்கிறார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், உயர் கல்வி செயலாளர் சுனில் பாலிவல் ஆகியோர் சிறப்புரையும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா பட்டமளிப்பு உரையும் ஆற்றுகின்றனர். விழாவில் 300க்கும் மேற்பட்டோர் பி.எச்.டி., பட்டங்கள் பெறவுள்ளனர். இதுதவிர இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்புகளில் 59 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. துணைவேந்தர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரையில் ஆய்வு : ஜன., 30, 31ல் மதுரையில் தங்கும் கவர்னர் ஆய்வில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பொது மக்கள் கூடும் இடங்களில் துப்பரவு பணியிலும் ஈடுபடுகிறார்.
Added : ஜன 23, 2018 00:51
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் 51வது பட்டமளிப்பு விழா ஜன., 29 நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகிக்கிறார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், உயர் கல்வி செயலாளர் சுனில் பாலிவல் ஆகியோர் சிறப்புரையும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா பட்டமளிப்பு உரையும் ஆற்றுகின்றனர். விழாவில் 300க்கும் மேற்பட்டோர் பி.எச்.டி., பட்டங்கள் பெறவுள்ளனர். இதுதவிர இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்புகளில் 59 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. துணைவேந்தர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரையில் ஆய்வு : ஜன., 30, 31ல் மதுரையில் தங்கும் கவர்னர் ஆய்வில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பொது மக்கள் கூடும் இடங்களில் துப்பரவு பணியிலும் ஈடுபடுகிறார்.
No comments:
Post a Comment