Thursday, December 1, 2016

* வெள்ளையாக மாற்ற வழி இருக்கு * வரி, அபராதம் முழு விவரம் * மறைத்தால் எல்லாமே பறிபோகும்

Dinakaran Daily News

* வெள்ளையாக மாற்ற வழி இருக்கு * வரி, அபராதம் முழு விவரம் * மறைத்தால் எல்லாமே பறிபோகும்

புதுடெல்லி: கருப்பு பணத்தை கணக்கில் காட்ட மத்திய அரசு கடைசி வாய்ப்பை வழங்கி உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக ஜுன் முதல் செப்டம்பர் 30 வரை தாமாகவே முன்வந்து கருப்பு பணத்தை தெரிவிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதில் 45 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. அதை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வெளியிட்டது. இதில் 2.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என்று அறிவித்தது. கடைசி கட்டமாக தற்போது கருப்பு பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்தால் 50 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மீதம் உள்ள 50 சதவீத தொகையில் 25 சதவீதம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதி 25 சதவீத தொகையை 4 வருடம் கழித்தே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் வழிமுறைகள் வருமாறு:

நடப்பாண்டில் ஈட்டிய வருமானம்
1.கையில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.
2.நடப்பாண்டு வருமானத்தை கணக்கில் காட்டி அதற்குரிய வரியை கட்ட வேண்டும்.
3. இதில் வருமானவரி பிரச்னை ஏற்பட்டால் நடப்பாண்டில் வருமான உயர்வை கணக்கில் காட்ட வேண்டும்.கணக்கில் காட்டாத பணம் கணக்கில் இல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் உங்களுக்கு 4 வழிகள் உள்ளன. உதாரணமாக, 10 லட்சம் நோட்டுகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இதோ வழிகள்:

1 பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு கணக்கில் காட்டப்படாத வருமானம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
* கட்ட வேண்டிய வரி 50 சதவீதத்தின்படி 5 லட்சம்
* 25 சதவீத பணமான 2.5 லட்சத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
* மீதம் உள்ள 25% தொகையான 2.5 லட்சத்தை 4 வருடங்கள் கழித்து பயன்படுத்தலாம்.பயன்கள்:
* உங்கள் பணத்தில் 50 சதவீதம் நீங்கள் பெற முடியும்
* இது வெள்ளையாக மாற்றப்பட்ட பணம். எந்த தேவைக்கும் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.
* உங்கள் பணத்தை வெள்ளையாக்க சட்ட விரோத வழிகளை நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை.
பாதிப்பு:
* எதிர்காலத்தில் வருமானவரித்துறையின் பார்வையில் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டியது வரும்.

2 பணத்தை வங்கியில் நம்பிக்கையுடன் டெபாசிட் செய்ய வேண்டும்
* 10 லட்சம் பணத்தை தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம்.
* ஆனால் திடீரென இந்தப்பணம் எங்கிருந்து வந்தது என்று விசாரிக்கப்படும்.
* உங்களிடம் சரியான விளக்கம் இல்லாவிட்டால், இந்த 10 லட்சம் ரூபாய்க்கு கீழ்காணும் வகையில் வரி, அபராதம் இருக்கும்.
* 60 சதவீத வரியாக 6 லட்சம் பிடிக்கப்படும்
* கூடுதல்வரியாக1.50லட்சம் பிடிக்கப்படும்
* வருமான வரி அதிகாரி முடிவின் படி அபராதம் 1 லட்சம் விதிக்கப்படலாம்.
* 10 லட்சத்தில் 1.50லட்சம் கிடைக்கும்.பயன்கள்:
* ெசாற்ப பணமாவது கிடைக்கும்
* எந்தவித நோட்டீஸ் மற்றும் பிரச்னைகள் ஏற்படாது என நம்பலாம்.
பாதிப்பு:
* சிக்கினால் பெரிய பிரச்னை ஏற்படும்
* விசாரணை நடத்தப்படலாம்.

3கணக்கில் காட்ட முடியாத பணத்தை தூக்கி வீசி விடலாம்
* 50 சதவீத அபராத திட்டத்தில் பலன் பெற முடியாதவர்கள்தான் இப்படி முடிவெடுப்பார்கள்.
* இதன்படி. தூக்கி வீசப்படும் 10 லட்சத்தையும் இழக்க வேண்டியது தான்.
* அரசு மீட்க நினைக்கும் கருப்பு பணம் இதுதான்.

4 சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல்.
* இந்த முறையில் பரிமாற்றம் செய்யும் போது பிடிபட வாய்ப்பு அதிகம் உள்ளது.
* குற்றத்தை ஒப்புக் கொண்டால் 60 சதவீத வரி (30 சதவீத வரி + 30 சதவீத அபராதம்) விதிக்கப்படும்.
* 90 சதவீத வரி விதிக்கப்படும். இதில் 30 சதவீத வரி மற்றும் 60 சதவீத அபராதம் விதிக்கப்படும்.
பயன்கள்:
* எதுவுமே மிஞ்சாது.
* சட்டவிரோதம், எதிர்காலத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
* விசாரணை வளையத்தில் சிக்க வேண்டியது வரும்.

வீட்டில் சேமித்த பணமாக இருந்தால்
* பயமில்லாமல் வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
* விசாரணை வந்தால் ஏற்கனவே வருமானவரி கட்டிய ஆதாரங்களை காட்ட வேண்டும்.
* 2.50 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்து விசாரணை வருமா?:
* அரசு சந்தேகிக்கும் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்.
* அனைத்து டெபாசிட் பணமும் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024