Wednesday, October 11, 2017

'லாக்' ஆனது, 'டெபிட் கார்டு' ; பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

பதிவு செய்த நாள்10அக்
2017
22:24




காஞ்சிபுரம்: 'டெபிட் கார்டு' செயல் இழந்ததால், செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த, வெளிநாட்டு இளைஞர், பிச்சை எடுத்தார்.ரஷ்யாவைச் சேர்ந்தவர், பெர்டினிகா, 25: இந்தியாவை சுற்றிப் பார்க்க, சில நாட்களுக்கு முன் வந்தவர், நேற்று முன்தினம், சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் வந்தார்.கையில் இருந்த பணம் செலவாகி விட்டது. தன், 'டெபிட் கார்டு' மூலம் பணம் எடுக்க, ஏ.டி.எம்., இயந்திரம் ஒன்றில், நேற்று காலை, முயற்சி செய்துள்ளார்.
'பாஸ்வேர்டை' தவறுதலாக அழுத்தியதால், ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை; 'லாக்' ஆகிவிட்டது. தொடர்ந்து பல, ஏ.டி.எம்., இயந்திரங்களில் முயற்சித்த அவர், ஏமாற்றம் அடைந்தார்.செலவுக்கு கையில் பணமில்லை; பசியுடன் நகரை சுற்றி வந்தார். காலை, 9:00 மணிக்கு, காஞ்சிபுரம் முருகன் கோவில் அருகே சென்றார்.கோவில் வாசலில், பலர் பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்தார். பக்தர்கள் பலர், பிச்சைக்காரர்களுக்கு பணம் போடுவதை பார்த்த அவர், பிச்சைக்காரர்களுடன் உட்கார்ந்து கொண்டார்.கோவில் வாசலில் அமர்ந்து, கையேந்தி பிச்சை கேட்டார். 'வெள்ளைக்காரன் பிச்சை கேட்கிறானே...' என, பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்; சிலர், பிச்சையும் போட்டுள்ளனர்.
வெள்ளைக்காரர் பிச்சை எடுக்கும் தகவல், சிவகாஞ்சி போலீசாருக்கு தெரிந்தது. கோவிலுக்கு வந்த போலீசார், பிச்சை எடுத்த காசை எண்ணிக் கொண்டிருந்த வாலிபரை, ஜீப்பில் ஏற்றி, ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.அங்கு நடத்திய விசாரணையில், டெபிட் கார்டை, அவர் பயன்படுத்த முடியாமல் போனதும், செலவுக்கு பணமில்லாமல், பசியில் வாடியதும் தெரிந்தது.

அந்த இளைஞருக்கு, சாப்பாடு வாங்கி கொடுத்த போலீசார், செலவுக்கு பணம் கொடுத்து, 'சென்னையில் உள்ள, ரஷ்ய துாதரகம் சென்று, பிரச்னையை சொல்லுங்கள்' எனக்கூறி, அனுப்பி வைத்தனர்.இங்கே உள்ளூர்காரர்கள் பலர், பல கோவில்களில் பிச்சை எடுத்து வரும் நிலையில், வெளிநாட்டுக்காரர் பிச்சை எடுத்தது, காஞ்சிபுரம் நகரில் பரபரப்பையும், சிரிப்பையும் வரவழைத்தது.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...