Wednesday, October 11, 2017

போதையில் பேராசிரியர் கலாட்டா



நாமக்கல்: குமாரபாளையம், அரசு கலைக் கல்லுாரியில், தமிழ் பேராசிரியர் போதையில் கலாட்டா செய்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், அரசு கலைக் கல்லுாரி உள்ளது. தமிழ் பேராசிரியராக கண்ணன், 42, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், மது போதையில் வகுப்பறை மற்றும் கல்லுாரி அலுவலகத்தில், தகாத வார்த்தைகளால் பேசியதாக, போலீசாருக்கு புகார் சென்றது. அவர்களும்எச்சரித்து சென்றனர்.
நேற்று மதியம், 12:00 மணியளவில், போதையில் கல்லுாரிக்கு வந்த கண்ணன், பெண் பேராசிரியர்கள், அலுவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கலாட்டா செய்துள்ளார். தகவலறிந்து, குமாரபாளையம் போலீசார் வந்ததும், கண்ணன் வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது.
கல்லுாரி முதல்வர் கீர்த்தி, ''தமிழ் பேராசிரியர் கண்ணன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தார். பல முறை குடி போதையில் கல்லுாரிக்கு வந்து, அலுவலர்களை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். 
உயர்கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தந்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...