Sunday, February 1, 2015

மொத்த ரயிலையும் முன்பதிவு செய்யும் வசதி: துவங்கியது முன்னோடி திட்டம்

ரயிலின் அனைத்து பெட்டிகளையோ, குறிப்பிட்ட ஒரு பெட்டியையோ முழுமையாக முன்பதிவு செய்யும் வசதியை, ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது.

விழாக்கள், வழிபாடு செல்லுதல், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய தருணங்களுக்கு, பலர் குழுக்களாக செல்வது வழக்கம். இவர்கள் அனைவரும், ஒரே ரயிலில் பயணம் செய்யவும் விரும்புகின்றனர். அவர்களின் வசதிக்காக, எண்ணிக்கையின் அடிப்படையில், அனைத்து பெட்டிகளிலும், குறிப்பிட்ட ஒரு பெட்டியில் உள்ள அனைத்து இடங்களையும் முன்பதிவு செய்யும் வசதியை, ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்ட முன்னோடி திட்டமாக, மேற்கு ரயில்வே மண்டலத்தில் அறிமுகமாகி உள்ளது. பயண தேதிக்கு முன், 30 நாட்களில் துவங்கி, ஆறு மாதத்திற்கு முன் வரை, முன்பதிவு செய்ய முடியும். விரைவில், தெற்கு ரயில்வேயிலும் இந்த திட்டத்தை எதிர்பார்க்கலாம் என, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024