Friday, February 2, 2018

புதிய மருத்துவக் கல்லூரி தமிழகத்திற்கு வருமா?

Added : பிப் 02, 2018 03:01

'மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 24 மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றை, தமிழகத்திற்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

பார்லிமென்டில் நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில், 'புதிதாக, 24 மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்படும். மூன்று லோக்சபா தொகுதிக்கு, ஒரு மருத்துவக் கல்லுாரி அமையும் வகையில், மருத்துவக் கல்லுாரிகள் விரிவாக்கம் செய்யப்படும்' என, நிதி அமைச்சர், அருண் ஜெட்லி அறிவித்தார்.
நாட்டிலேயே அதிகமாக, தமிழகத்தில் தான், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. சென்னையை தொடர்ந்து, தென் மாவட்டங்களிலும், பல் மருத்துவக் கல்லுாரி ஒன்று துவக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளையை துவக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றாவது, தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரிகள் இல்லை. அதனால், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றை, இந்த மாவட்டங்களில் துவக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...