Saturday, May 13, 2017

செல்லாத நோட்டு அறிவிப்பால்
வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு


புதுடில்லி: செல்லாத நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 91 லட்சம் உயர்ந்துள்ளது.




கடந்த, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி, பழைய, செல்லாத தாக அறிவிக்கப்பட்ட,500-1,000 ரூபாய் நோட்டு களை மாற்றிக் கொள்வது உட்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், 2016 - 17ம் நிதியாண்டில், வருமான வரி செலுத்து வோரின் எண்ணிக்கை, 91 லட்சம் உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டு உயர்வை ஒப்பிடு கையில், 80 சதவீத அதிகம். இந்த உயர்வை யும் சேர்த்து, தற்போது, 5.59 கோடி பேர்,தனிநபர் வரு மான வரி செலுத்துவோர் பிரிவின் கீழ் வருகின்றனர்.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் மாற்றம் இருக் கும். கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், புதிதாக, 60 லட்சம் பேர் வருமான வரி செலுத்துவோர் பிரிவில் சேர்ந்தனர்.

அதே நேரத்தில், மரணம், ஓய்வு உள்ளிட்ட காரணங் களால், 10 லட்சம்பேர் இதில் இருந்து விலகினர். அதன்படி, கடந்த ஆண்டில், வருமான வரி செலுத்து வோர் எண்ணிக்கை, 50 லட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில், 2016 - 17ம் நிதியாண் டில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 91 லட்சமாக உர்ந்துள்ளது.

இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தான். அந்த அறிவிப்புக்குப் பிறகு, கையில் இருந்த,பதுக்கி வைத்திருந்த பணத்தை வங்கி களில் செலுத்தினர்.அவர்கள் தாக்கல் செய்த, 'பான் கார்டு' எண் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், தற்போது வருமான வரி வளையத்துக்குள் வந்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...