Thursday, September 7, 2017

நெல்லையில் பலத்த மழை

பதிவு செய்த நாள்06செப்
2017
22:25

திருநெல்வேலி: நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பெய்த மழையில், குளம் உடைப்பெடுத்தது. நெல்லை, துாத்துக்குடியில், இரண்டு தினங்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த மழை பெய்தது. கழுகுமலை- - குமாரபுரம் இடையே, சாலையில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, தற்காலிகமாக போடப்பட்ட பாலத்தை உடைத்து, தண்ணீர் வெள்ளமாக சென்றது. கோவில்பட்டியை அடுத்துள்ள பாப்பான்குளத்தில் பெய்த பலத்த மழையால், அங்குள்ள குளம் உடைந்து, தண்ணீர் முழுவதும் வெளியேறியது. நெல்லையில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. பேட்டை, என்.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாலை, 4:30 முதல், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, மழை பெய்தது.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...