Tuesday, September 5, 2017

இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள்04செப்
2017
18:53




1888 செப்டம்பர் 5

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், திருத்தணியில், சர்வபள்ளி வீராசாமி - சீதம்மா தம்பதிக்கு மகனாக, 1888 செப்., 5ல் பிறந்தார். சென்னை பல்கலையில், முதுகலை பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில், பயிற்சி பெற்றார்.சென்னை மாநில கல்லுாரியில் துவங்கி, மைசூரு, கோல்கட்டா, வாரணாசி மற்றும் ஆக்ஸ்போர்டில், தத்துவ பேராசிரியராக பணியாற்றினார். முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.கடந்த, 1938ல், அவருக்கு, 'சர்' பட்டம் கொடுத்து, பிரிட்டிஷ் அரசு கவுரவித்தது. சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, உயர்நிலைப் பள்ளிகளில், ஹிந்தி மொழிப்பாடம் கட்டாயம் என, அறிவித்தார். அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த, சென்னை மாகாண காங்., தலைவர்களில் ஒருவராக, ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது பெற்றவர்.இவர் பிறந்த தினமான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர், பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.04.2026

After CU, VB profs move HC over EC’s election duty order  Dipawali Mitra, Subrata Chattoraj & Srishti Lakhotia  TNN 21.04.2026 Kolkata :...