Thursday, September 7, 2017

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏமாற்றப்படும் அரசு ஊழியர்கள்
பதிவு செய்த நாள்06செப்
2017
22:21

அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சை பெறக் கூடிய நோய், மருத்துவமனை விபரங்களை மட்டுமே அரசு அறிவித்துள்ளது. சிகிச்சைக்குரிய செலவு விபரத்தை அறிவிக்காததால், காப்பீட்டு நிறுவனம், முறையாக பணம் கொடுப்பதில்லை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அவர்கள் சம்பளத்தில் மாதம், 180 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.

சிகிச்சை ; இதில், இதய நோய் உட்பட, 59 வகையான நோய்களுக்கு, 300க்கும் மேற்பட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தில், நான்கு ஆண்டுகளில், நான்கு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கு, 7.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிகிச்சைக்குரிய தொகையை கணக்கிட்டு வழங்கும் பணியை, எம்.டி., இந்தியா என்ற தனியார் நிறுவனத்திடம், யுனைடெட் இந்தியா நிறுவனம் ஒப்படைத்து உள்ளது. இந்த திட்டத்தில், சிகிச்சை பெறக் கூடிய நோய், மருத்துவமனை விபரங்களை மட்டுமே அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கண்புரை அறுவை சிகிச்சைக்கு, 25 ஆயிரம் ரூபாய், கர்ப்பப்பை நீக்கத்திற்கு, 45 ஆயிரம் ரூபாய் என, இரண்டு நோய்களுக்கு மட்டுமே, செலவு விபரம் தெரிவித்துள்ளது. மற்ற நோய்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால், மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு, அதற்குரிய பணத்தை, காப்பீட்டு நிறுவனம் முழுமையாக வழங்குவதில்லை.

வழங்குவதில்லை ; இதனால், பாதித் தொகையை, சிகிச்சை பெறுவோரே மருத்துவ மனைக்கு செலுத்த வேண்டியுள்ளது. மேலும், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த சிலருக்கு மட்டும் முழுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: சிகிச்சைக்குரிய பணத்தை, முழுமையாக மருத்துவமனைகளுக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்குவதில்லை. பிரச்னை செய்வோருக்கு மட்டுமே பணம் வழங்குகின்றனர். டாக்டர் ஆலோசனை கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம், அறை வாடகை, உணவு உள்ளிட்ட அனைத்திற்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் தர வேண்டுமென, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை, இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்த மறுக்கிறது. ஒவ்வொரு நோய்க்கும், தனித்தனியாக சிகிச்சைக்கான தொகை விபரத்தை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இன்சூரன்ஸ் நிறுவனத்தினர், 'அரசு விதிமுறைப்படி, இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறோம்' என்றனர்.

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...