Thursday, September 7, 2017

மோகனூரை புரட்டிப்போட்ட சூறாவளி : 50 ஆயிரம் வாழை, வெற்றிலை சேதம்

பதிவு செய்த நாள்06செப்
2017
20:06




நாமக்கல்: மோகனுாரை புரட்டி போட்ட சூறாவளி காற்றால், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள, 50 ஆயிரம் வாழைகள், 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் சேதம் அடைந்தன.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, வரலாறு காணாத சூறாவளி காற்று வீசியது. காவிரி கரையோரம் பயிரிடப்பட்டிருந்த, வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் வேரோடு சாய்ந்தன. மோகனுாரில், 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது; 200க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள், பீதியில் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். அப்பகுதியில் பல நுாறு ஏக்கர் பயிரிடப்பட்டிருந்த, ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல், 10 ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் பயிரும் மூட்டுவேலியுடன் கீழே விழுந்துள்ளதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிர்வாகி, கூறியதாவது:

சூறாவளி காற்றில், 50 ஆயிரம் வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் ஆகியவை சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு, மூன்று கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கு, இலக்கு நிர்ணயம் செய்து முடிக்க நினைக்கும், வேளாண் துறையினர், இதற்கு எப்படி இழப்பீடு தரப்போகின்றனர் என்பது தெரியவில்லை.

மாவட்ட நிர்வாகம், நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...