Monday, September 4, 2017

பிஸியாக இருப்பவர்கள்! மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்!
2017-08-31@ 15:25:51




நன்றி குங்குமம் டாக்டர்

‘நான் ரொம்ப பிஸி...’ என்று ‘சூரியன்’ கவுண்டமணி மாதிரி உதார் விடாமல், நிஜமாகவே பிஸியாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. பிஸியாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கொஞ்சம் குழம்புகிறர்வகளுக்காக, ஆராய்ச்சியை மேற்கொண்ட சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவின் தலைமை ஆய்வாளரான கிரிஸ்டோபர்ஹிசி நான்கு காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அந்தக் காரணங்களைத் தெரிந்துகொண்டால் இனி சும்மா இருக்கவே விரும்ப மாட்டீர்கள் என்பது நிச்சயம்.மன நிறைவு அடிப்படையில் மனிதன் ஒருபோதும் தன் ஆற்றல் வீணாவதை விரும்பாதவன். அதனால், பரபரப்பாக வேலை செய்வது உளவியல் ரீதியாகவே ஒருவருக்கு தன்னிறைவைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது, அதற்கான தொடர் சிந்தனையில் இருக்கும்போது உங்கள் மூளையும் சுறுசுறுப்படைகிறது. ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் உழைத்துக் கொண்டிருப்பது உளவியல்ரீதியாக மகிழ்ச்சியையே தரும்.

வார இறுதிநாட்களிலும்கூட நீண்ட தூக்கம், சினிமா, பார்ட்டி என்று நேரத்தை வீணடிக்காமல் மளிகைப் பொருட்கள் / காய்கறிகள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்டப்பராமரிப்பு என பயனுள்ள வகையில் அந்த நாளை செலவிடும்போதும், அதன்பிறகு அதை நினைத்துப் பார்க்கும்போதும் உங்களுக்கே பெருமையாக இருக்கும். முன்னேற்றம்‘வியாபார முன்னேற்றத்துக்கான சிந்தனை, வேலை சார்ந்து புதிதாகக் கற்றுக்கொள்வது, சமூக பங்களிப்பு அல்லது உடற்பயிற்சிகள் செய்வது’ என எப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றே பொருள்.

இப்படி பிஸியாக இருப்பதன் மூலம் உங்களை அறியாமலேயே உங்கள் மூளையானது, இந்த வேலையை இன்னும் எவ்வளவு வேகமாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும் என்பதற்கான வழிகளை சிந்திக்க தொடங்கிவிடுகிறது. இதனால் உங்கள் செயல்திறன் மேலும் மெருகேறும்.
தன்னம்பிக்கை கற்றலும், முன்னேற்றமும் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தொடர்ந்து ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பதால் கற்றல் மற்றும் செயல் வளர்ச்சி உண்மையிலேயே உயர்ந்த நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.

வாழ்க்கையின் பல அனுபவங்களைக் கற்றுக்கொள்ளும் நீங்கள், உங்கள் வேலைகளை மற்றவர்களின் வேலைகளோடு ஒப்பிட்டுப்பார்த்து மேலும் எப்படி திறமையாக செய்ய முடியும் என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் வளரும். நேர்மறை அணுகுமுறை வேலையில்லாமல் இருக்கும்போதுதான் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். சுறுசுறுப்பாக இருந்தால் மற்றவைகளைப்பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை நல்லவிதமாக செய்வதையே சிந்தியுங்கள். முக்கியமான விஷயம்... எப்போதும் பிஸியாக இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு சூப்பர்மேன்/சூப்பர் உமன் இமேஜ் உருவாகும் என்பது உங்களுக்கு எக்ஸ்ட்ராகிஃப்ட்!

- உஷா நாராயணன்

No comments:

Post a Comment

CM Vijay, Udhayanidhi spar on social media

CM Vijay, Udhayanidhi spar on social media  TIMES NEWS NETWORK  14.05.2026 Chennai : Hours after the assembly session was adjourned sine die...