Wednesday, September 6, 2017

கொச்சி விமான நிலையத்தில் ஓடு பாதையில் இருந்து விலகியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
2017-09-06@ 00:43:40




திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடு பாதையில் இருந்து விலகி, மழைநீர் வடிகால் கால்வாயில் இறங்கியது. இதில் விமான பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் அபுதாபியில் இருந்து கொச்சிக்கு நேற்றுஅதிகாலை 2.45 மணியளவில் வந்தது.

கன மழை காரணமாக ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், நிறுத்தும் இடத்துக்கு திரும்பும்போது சறுக்கியது. அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விமானத்தின் முன்சக்கரம் இறங்கி சேதமடைந்தது. அந்த விமானத்தில் வந்த 102 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

IRCTC to launch clutter-free, faster ticket booking website

IRCTC to launch clutter-free, faster ticket booking website  Dipak.Dash@timesofindia.com 11.06.2026 New Delhi : Booking train tickets throug...