Wednesday, September 6, 2017

நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை - வேலூர் சி.எம்.சி நிர்வாகம் தகவல்!
கா.முரளி

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் படுவேகமாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது தவறான தகவல் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சி.எம்.சி கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜேஸ்பரிடம் பேசினோம்."தவறான தகவல் இது. நீட் தேர்வில், தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் அட்மிசனுக்கு அழைக்க உள்ளோம். நீட் தேர்வில் தேர்வான 300 மாணவர்களை நாங்கள் நடத்தும் மூன்று நாள் கலந்தாய்வுக்கு அழைப்போம், அதில் அந்த மாணவர்கள் கிராமப்புறத்தில் பணியாற்றக்கூடிய தன்மையையும், லீடர்ஷிப் தகுதியையும் மருத்துவராகக்கூடிய இயல்பும் உள்ளதா என எங்கள் கல்லூரி தேர்வுசெய்யும். அதில் தேர்வான மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு சீட் தருவோம். இந்த முறையைத்தான் நாங்கள் இதுநாள் வரை கடைப்பிடித்தோம். ஆனால், தற்போது தனியார் கல்லூரிகள் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கவுன்சில் தடை செய்துள்ளது.

இதற்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதற்கான விவாதங்கள் முடிந்து அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு வருகிறது. அதன்பிறகே நாங்கள் 99 எம்.பி.பி.எஸ் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்தவுள்ளோம். நீட் தேர்வை எதிர்த்து, நாங்கள் அட்மிசனை நிறுத்தி வைத்திருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் கலந்தாய்வுக்கு அழைப்போம். 1918-ம் ஆண்டு தொடங்கியது எங்கள் கல்லூரி, இந்தியாவிலேயே முதல் தனியார் மருத்துவக்கல்லூரி. அடுத்த ஆண்டு 100 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...