Thursday, September 7, 2017

ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் போலீசாரின் என்.ஓ.சி., தேவையில்லை : உடனே 'டூப்ளிகேட்' பெற ஏற்பாடு

பதிவு செய்த நாள்  06செப்
2017
23:50

திண்டுக்கல்: வாகன ஓட்டிகளின் ஒரிஜினல் 'ஓட்டுனர் உரிமம்' தொலைந்து போனால், மீண்டும் பெற போலீசின் தடையில்லா சான்று தேவையில்லை. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுக் கொடுத்தால், 'டூப்ளிகேட்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்வோர் மீது, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த கட்டாரியா வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போனால், போலீசாரின் தடையில்லா சான்று(என்.ஓ.சி.,) பெற வேண்டும். இதனால் தங்களின் பணிகள் பாதிப்பதாகவும், ஊதிய இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் ஒரிஜினல் உரிமம் தொலைந்தால் போலீசாரின் என்.ஓ.சி., தேவையில்லை. அதுபற்றி, போலீஸ்'ஆன்லைனில்' பதிவு செய்து ரசீது பெற்றால் போதும். இதை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்துடன் இணைத்து மூன்று நாளில் 'டூப்ளிகேட்' உரிமம் பெறலாம் என, தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் கூறியதாவது: போக்குவரத்து ஆணையரின் உத்தரவு, வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும். ஒரிஜினல் உரிமத்தின் ஜெராக்ஸ் காப்பியுடன், போலீசில் ஆன்லைனில் விண்ணப்பித்த ரசீதையும் இணைத்து விண்ணப்பிப்பது அவசியம். அதற்கு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...