Saturday, September 16, 2017

ரிசார்ட்டில் தங்கியிருப்பது ஏன்
தினகரன் அணி எம்.எல்.ஏ., விளக்கம்

குடகு: ''ஆசிரியர் பணியையும், எம்.எல்.ஏ.,க்கள் பணியையும் ஒப்பிடமுடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்;நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராடவில்லை. ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காககூடியுள்ளோம்,'' என, தினகரன் அணி,எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.




கர்நாடகாவின் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை, 'பேடிங்டன்' ரிசார்ட்டில் உள்ள தினகரன் அணி, எம்.எல்.ஏ.,

தங்க தமிழ்ச்செல்வன் நேற்று அளித்த பேட்டி: நாங்கள், 19 எம்.எல்.ஏ.,க்களும், ஒற்றுமையாக இருக்கிறோம். அரசு நினைத்தால்,என்ன செய்யும். அதிகாரம் வைத்துள்ளஅரசு, எங்கள் ஒற்றுமையை குலைக்கநினைக்கும்; ஆனால், அது முடியாது.

பன்னீர்செல்வம் உட்பட, 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவசர கோலத்தில், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.எங்கள் உறவினர்கள், ஜாதி அமைப்பினர் மூலம், சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.ஒரு சிலருக்கு மிரட்டல்கடிதமும் வந்துள்ளது. 20ம் தேதிக்குள், கட்சி பொதுக்குழு நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

'வேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?ரிசார்ட்டில் முடங்கிக் கிடக்கும் குதிரை பேர அரசியல்வாதிகளுக்கு கிடையாதா?' என,நடிகர் கமல் கூறியிருப்பது குறித்து, நிருபர்கள் கேள்வி

எழுப்பினர்.அதற்கு, ''ஆசிரியர் பணி, எம்.எல்.ஏ.,க்கள் பணிகளுடன் ஒப்பிட முடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராட வில்லை. 

ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கூடியுள்ளோம்,'' என்றார்.தினகரன் இன்று, 'பேடிங்டன்' ரிசார்ட்வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...