Tuesday, September 5, 2017

பெற்றோருக்கு புளூவேல் விழிப்புணர்வு: போலீசார் முடிவு

பதிவு செய்த நாள்05செப்
2017
01:26

திண்டுக்கல்: மதுரை, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த இளைஞர் 'புளூவேல்' இணைய விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள பெற்றோர்-, ஆசிரியர் கழகம் மூலம் பெற்றோரை போலீசார் வரவழைப்பர். பின்னர் குழந்தைகளை கணினி, அலைபேசி விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்க கூடாது. அவர்களை தனிமையில் அமர வைக்காமல், முடிந்தவரை நண்பர்களுடன் தெருக்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை பெற்றோருக்கு போலீசார் வழங்குவர். திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் கூறியதாவது: 'புளூவேல்' விளையாட்டின் விபரீதம் குறித்து மாணவர்களை விட, அவர்களின் பெற்றோரிடம் கூறினால்தான் தீர்வு காண முடியும். போலீசாரின் தற்போதைய நடவடிக்கையால், புரோசிங் மையங்களில் இருந்து இந்த விளையாட்டை டவுன்லோடு செய்ய முடியாது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.04.2026

After CU, VB profs move HC over EC’s election duty order  Dipawali Mitra, Subrata Chattoraj & Srishti Lakhotia  TNN 21.04.2026 Kolkata :...