Monday, September 4, 2017

1176 மதிப்பெண் 197.50 கட் ஆஃப். நீட்டால் பிரதீபாவிற்கு கனவாகிப்போன மருத்துவம் #NEET

பி.ஆண்டனிராஜ்




பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான சாத்தை பாக்கியராஜ் தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு ஒரு தாயும் மகளும் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கட்சியினர் அல்லாத ஒருவர் திடீரென வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால், அவர்களிடம் கட்சியினர் விசாரித்தனர். அப்போது அவர்களும் இதே விஷயத்துக்காக கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவரம் தெரிய வந்தது. பிரதிபா என்ற அந்த மாணவி 1176 மார்க் எடுத்த நிலையில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ வாய்ப்பு பறிபோய் இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.



இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, 10-வது வகுப்பில் 495 மதிப்பெண் பெற்று உள்ளார். அதனைத் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வில் தமிழ் மொழியில் படித்து 1176 மதிப்பெண் பெற்றுள்ளார். 197.50 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற அவர், நிச்சயமாக மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைக்கும் என நம்பினார். ஆனால், திடீரென நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அவரால் அதில், 200 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்துள்ளது. இதனால் அவரது மருத்துவக் கனவு தகர்ந்தது.

மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற அவருக்கு பல் மருத்துவப் படிப்புக்குத் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளது. கூலித் தொழிலாலியின் மகளான தன்னால் பணம் கட்டி தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாததால் கல்லூரியில் சேராமல் உள்ளார். தனது மதிப்பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகளில் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டார். அதனால் தற்போது வேதனையில் உள்ளார். பின்னர் பிரதிபாவும் அவரது தாய் விஜயலட்சுமியும் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து தங்களின் வேதனையைச் சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

No comments:

Post a Comment

Changes in varsities Act opposed

Changes in varsities Act opposed The Hindu Bureau MADURAI 13.09.2026 The members of the Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Tere...