Saturday, September 16, 2017

பொங்கல் ரயில்கள் 'ஹவுஸ்புல்'

பதிவு செய்த நாள்16செப்
2017
00:04


சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுகள், 'ஹவுஸ்புல்' ஆகின.

பொங்கல் பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம்.

அடுத்த ஆண்டு, ஜன., 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 120 நாட்கள் வரை முன் பதிவு செய்யலாம் என்பதால், ஜன., 13ல், சொந்த ஊர் செல்வதற்காக, நேற்று ஏராளமானோர் முன்பதிவு மையங்களில் குவிந்தனர்.
சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் உட்பட, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், காலையில், கூட்டம் நிரம்பி வழிந்தது. 

சென்னை, எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்கள் நிரம்பின. உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மாலை, 5:00 மணிக்கு முடிந்தன.

ஜனவரி, 13ல், பகலில் இயக்கப்படும் சில ரயில்களில், கணிசமான இடங்கள் மீதம் உள்ளன

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...