Tuesday, September 5, 2017

சேலம் அருகே சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது


சேலம் அருகே சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 02, 2017, 05:30 AM

தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள வனவாசி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சீனிவாசன் (வயது 48). எம்.பி.பி.எஸ். படித்த இவர் சர்க்கரை நோய் சிகிச்சைக்கான பட்டய படிப்பும் முடித்துள்ளார்.

தாரமங்கலத்தில் உள்ள சங்ககிரி மெயின் ரோட்டில் பழைய சந்தைபேட்டை அருகே டாக்டர் சீனிவாசன் சொந்தமாக ஆஸ்பத்திரி கட்டி கடந்த 15 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்த நிலையில் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டியை சேர்ந்த 28 வயது இளம்பெண் காய்ச்சலுக்காக நேற்று முன்தினம் இரவு டாக்டர் சீனிவாசனின் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது சிகிச்சை அளிப்பதாக கூறி அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும், டாக்டர் சீனிவாசனை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், டாக்டர் சீனிவாசனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையே, அந்த இளம்பெண் தனக்கு டாக்டர் சீனிவாசன் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இது தொடர்பாக டாக்டர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் நேற்று ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.04.2026

After CU, VB profs move HC over EC’s election duty order  Dipawali Mitra, Subrata Chattoraj & Srishti Lakhotia  TNN 21.04.2026 Kolkata :...