Tuesday, September 5, 2017

போலி டாக்டர் நடத்திய மருந்து கடைக்கு சீல் மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை


சேலம் அருகே போலி டாக்டர் நடத்திய மருந்து கடைக்கு கலெக்டர் ரோகிணி ‘சீல்‘ வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

செப்டம்பர் 04, 2017, 04:30 AM

சேலம்,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கண்டர்குலமாணிக்கம் கிராமத்தில் கலெக்டர் ரோகிணி, டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது டெங்கு தடுப்பு பணியில் மெத்தன போக்கை கடைபிடித்து வந்ததாக கண்டர்குலமாணிக்கம் ஊராட்சி செயலாளர் செந்திலை உடனடியாக இடமாற்றம் செய்ய கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.

ஆய்வு பணியின்போது மகுடஞ்சாவடிக்கு கலெக்டர் ரோகிணி வந்தார். அங்கு பஸ் நிறுத்தம் அருகில் ‘சுகம் மெடிக்கல் ஸ்டோர்‘ என்ற பெயரில் மருந்து கடை இருந்தது. அந்த கடையில் கலெக்டர் ரோகிணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

அப்போது கடையில் வேலை பார்க்கும் 10–ம் வகுப்பு வரை படித்துள்ள கார்த்திகேயன்(வயது32) என்பவர் இருந்தார். மருந்து கடையின் உள்ளே ‘கிளினிக்‘ அமைத்து, அதில் படுக்கை ஒன்றும் போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அவரிடம் விசாரித்தபோது, கன்னந்தேரியை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) என்பவர் கடை உரிமையாளர் என்பதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. அந்த சமயத்தில் பாஸ்கர் அங்கு இல்லை. பாஸ்கர், ‘‘பி.எச்.எம்.எஸ்.‘‘ என்னும் ஓமியோபதி மருத்துவம் படித்தவர் என்பதும், எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் போல அலோபதி மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு ஊசி மருந்து போட்டு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. மேலும் கார்த்திகேயனும் போலி டாக்டர் போல நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார்.

இதையடுத்து கார்த்திகேயன் போலி டாக்டர் என்பதை உறுதி செய்த கலெக்டர் ரோகிணி, அவர் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்திய அறையில் உள்ள மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் உதவியுடன் பறிமுதல் செய்தார்.

அத்துடன் மருந்து கடைக்கும் கலெக்டர் ரோகிணி பூட்டு போட்டு ‘சீல்‘ வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்க சங்ககிரி உதவி கலெக்டர் ராம.துரைமுருகனுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மருந்துகடை உரிமையாளர் பாஸ்கர், கார்த்திகேயன் ஆகியோர் மீது மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பிடிபட்ட கார்த்திகேயனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.04.2026

After CU, VB profs move HC over EC’s election duty order  Dipawali Mitra, Subrata Chattoraj & Srishti Lakhotia  TNN 21.04.2026 Kolkata :...