Tuesday, September 5, 2017

சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் சேர 1122 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு


தமிழகத்தில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான மருத்துவ கலந்தாய்வு சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 05, 2017, 04:30 AM

சென்னை,

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி முடிவடைந்து நேற்று வகுப்புகள் தொடங்கின. பல் மருத்துவ இடங்களை பொருத்தவரை , அகில இந்திய ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடத்தப்பட்டுஅதில் உள்ள மீதம் 2 இடங்கள் வந்ததால் அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 87 இடம் இருந்தன .அந்த இடங்கள் நிரம்பி விட்டன. சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 18 உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து அரசு ஓதுக்கீட்டுக்கு 1198 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 715 ஆகும்.

சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 714 பேர் அழைக்கப்பட்டதில் 650 பேர் வரவில்லை. 64 பேர்தான் கலந்துகொண்டனர். 64 பேர்களில் 31 பேர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3 பேர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான கல்லூரி கிடைக்காதால் அவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியே போதும் என்று தெரிவித்தனர். 30 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

சுயநிதி பல் மருத்துவ இடங்களுக்கான அரசு ஓதுக்கீட்டு இடங்கள் 441 உள்ளன. மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 681 இருக்கின்றன. இந்த இடங்களுக்கு இன்று (செவ்வாய்க் கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளையும் கலந்தாய்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.04.2026

After CU, VB profs move HC over EC’s election duty order  Dipawali Mitra, Subrata Chattoraj & Srishti Lakhotia  TNN 21.04.2026 Kolkata :...