வெளிநாட்டவர், என்ஆர்ஐகளுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 360 நாட்களாக நீட்டிப்பு
2017-07-04@ 00:51:57
புதுடெல்லி: ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் தற்போது 120 நாட்களாக இருந்த முன்பதிவு காலம் தற்போது 360 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏறக்குறைய ஓராண்டு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டவர்கள் ராஜ்தானி, சதாப்தி, கதிமான், தேஜாஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்பு பெட்டிகளில் மட்டும் முன்பதிவு செய்யலாம். சாதாரண வகுப்பு மற்றும் மூன்றடுக்கு ஏசி வகுப்புகளில் இவர்கள் முன்பதிவு செய்ய அனுமதி கிடைாது.
இதுபோல் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்க சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இதிலும் இவர்கள் முன்பதிவு செய்ய முடியாது. வெளிநாட்டவரும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பல மாதங்கள் முன்பே தங்கள் விடுமுறை பயணம் அல்லது சுற்றுலாவுக்கு திட்டமிடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டே முன்பதிவு கால அவகாசம் இவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. டிராவல் ஏஜென்ட்கள் துணையின்றி ஆன்லைனில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உதவியுடன் இவர்களே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் விசா, பாஸ்போர்ட், சர்வதேச மொபைல் எண் ஆகிய விவரங்களையும் முன்பதிவின்போது இவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்களுக்கு சேவை கட்டணமாக தலா ரூ.200 வசூலி–்க்கப்படும். ரத்து செய்ய ரூ.50 கழித்தது போக எஞ்சிய தொகைக்கு ஏற்கெனவே உள்ள ரத்து விதிகள் கடைப்பிடிக்கப்படும். மேலும் இந்த பயணிகளுக்காக மொபைல் ஆப்சை ரயில்வே வெளியிட உள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி, தங்கும் அறை, டாக்சி, போர்ட்டர், உணவு ஆர்டர் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் என்றார்.
2017-07-04@ 00:51:57
புதுடெல்லி: ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் தற்போது 120 நாட்களாக இருந்த முன்பதிவு காலம் தற்போது 360 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏறக்குறைய ஓராண்டு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டவர்கள் ராஜ்தானி, சதாப்தி, கதிமான், தேஜாஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்பு பெட்டிகளில் மட்டும் முன்பதிவு செய்யலாம். சாதாரண வகுப்பு மற்றும் மூன்றடுக்கு ஏசி வகுப்புகளில் இவர்கள் முன்பதிவு செய்ய அனுமதி கிடைாது.
இதுபோல் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்க சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இதிலும் இவர்கள் முன்பதிவு செய்ய முடியாது. வெளிநாட்டவரும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பல மாதங்கள் முன்பே தங்கள் விடுமுறை பயணம் அல்லது சுற்றுலாவுக்கு திட்டமிடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டே முன்பதிவு கால அவகாசம் இவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. டிராவல் ஏஜென்ட்கள் துணையின்றி ஆன்லைனில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உதவியுடன் இவர்களே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் விசா, பாஸ்போர்ட், சர்வதேச மொபைல் எண் ஆகிய விவரங்களையும் முன்பதிவின்போது இவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்களுக்கு சேவை கட்டணமாக தலா ரூ.200 வசூலி–்க்கப்படும். ரத்து செய்ய ரூ.50 கழித்தது போக எஞ்சிய தொகைக்கு ஏற்கெனவே உள்ள ரத்து விதிகள் கடைப்பிடிக்கப்படும். மேலும் இந்த பயணிகளுக்காக மொபைல் ஆப்சை ரயில்வே வெளியிட உள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி, தங்கும் அறை, டாக்சி, போர்ட்டர், உணவு ஆர்டர் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் என்றார்.
No comments:
Post a Comment