Friday, July 27, 2018

சந்திர கிரகணம் எதிரொலி திருமலை அறைகள் மூடல்

Added : ஜூலை 26, 2018 22:46

திருப்பதி, திருமலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வைகுண்டம் காத்திருப்பு அறைகள், நேற்று மாலையுடன் மூடப்பட்டன.இன்று இரவு முதல், நாளை அதிகாலை வரை, முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையடுத்து, இன்று மாலை, 5:00 மணி முதல், நாளை காலை, 4:15 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது.கோவிலை சுத்தப்படுத்திய பின், நாளை காலை, 7:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, வைகுண்டம் காத்திருப்பு அறைகளை மூட, தேவஸ்தானம் உத்தரவிட்டது.இன்று, வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், கோவில் நடை சாத்தப்படும். அதற்கு பின், நாளை காலை, 4:00 மணிக்கு, மீண்டும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் திறக்கப்பட்டு, பக்தர்கள் காத்திருப்பு அறையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.மேலும், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று முழுவதும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான தரிசனத்தை, அதிகாரிகள் ரத்து செய்தனர்.கார் நன்கொடைதிருமலை ஏழுமலையானுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகனும், 'ஹர்ஷா டொயோட்டா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான, ஹர்ஷவர்தன், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, டொயோட்டா கிர்லோஸ்கர் காரை, நன்கொடையாக வழங்கினார். நேற்று காலை, ஏழுமலையான் கோவில் முன், காருக்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் இணை அதிகாரியிடம், காரின் சாவியை, அவர் வழங்கினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024