Friday, July 27, 2018

விசா' முடிந்தும் தங்கிய நைஜீரியர் கைது

Added : ஜூலை 26, 2018 23:40

-திருப்பூர், திருப்பூரில், 'விசா' காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த நைஜீரியர் ஒருவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.திருப்பூரில், பனியன் தொழில் சார்ந்து, பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிரந்தரமாக வசிக்கின்றனர். வெளிநாட்டினர் அவ்வப்போது வந்து செல்கின்றனர். அவ்வாறு, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பலர், 'விசா'வில் வருகின்றனர். ஒரு சிலர், எவ்வித ஆவணமுமின்றியும், சிலர் 'விசா' காலம் முடிந்தும் தங்குகின்றனர். அவர்களை கண்காணிக்கும் போலீசார், கைது செய்கின்றனர்.அவ்வகையில், திருப்பூர், மண்ணரை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த நைஜீரியர் ஒருவரை பிடித்து, வடக்கு போலீசார் விசாரித்தனர்.35 வயதான அவர், 'விசா' காலம் முடிந்தும்தங்கியிருந்தது தெரிய வந்தது.மேலும், கேரளாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன்ராக்கியாபாளையம், வி.ஜி.வி., கார்டனில் வசித்து வருகிறார்.இந்திய குடியுரிமை பெறுவதற்காக, கடந்த ஆண்டு விண்ணப்பித்திருப்பது தெரிந்தது. தற்போது, 'விசா' காலம் முடிந்து தங்கியிருந்த காரணத்துக்காக அவரை கைது செய்து, ஜே.எம்.எண்:1, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்உத்தரவின்படி, அவரை திருப்பூர் வடக்கு போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024