Thursday, September 14, 2017

கோவையில் வலுவிழக்கும் போராட்டம் : பணிக்கு திரும்பிய 2,000 ஆசிரியர்கள்

பதிவு செய்த நாள்13செப்
2017
22:00


கோவை: போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, நடவடிக்கை எடுக்கும் பணிகள் தீவிரமடைவதால், கோவை மாவட்டத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணிக்கு திரும்பியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 11ம் தேதியில் இருந்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. காலாண்டுத் தேர்வு நடப்பதால், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்றம் தடையை மீறியும், போராட்டங்கள் நடப்பதால், நேற்று, கல்வித் துறை சார்பில், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'வினியோகிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 5,162 ஆசிரியர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அளித்து, 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் உள்ளோரின் சான்றிதழ்களின், உண்மைத் தன்மையை ஆய்வு செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி மாணவர்களை கொண்டு தேர்வு நடப்பதால், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இதனால், போராட்ட களத்தில் பங்கெடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, சரிய துவங்கிஉள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், ''மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், படிப்படியாக பள்ளிக்கு திரும்புகின்றனர்.குறிப்பாக, 7ம் தேதி, 5,162 ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய நிலவரப்படி, தொடக்கக் கல்வித் துறையில், 2,242 பேர்; உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 758 பேர் மட்டுமே விடுப்பு எடுத்து உள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...