Thursday, February 23, 2017


கோவைக்கு நாளை மோடி வருகை: 5,000 போலீசார் பாதுகாப்பு


கோவை ஈஷா மையத்தில் ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மோடி நாளை வர உள்ளதால், பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முகத் தோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை மகா சிவராத்திரியையொட்டி இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்துப் பேசுகிறார். இதனிடையே பிரதமர் மோடி வருகைக்கு, கோவையில் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், பாதுகாப்பு பணியில் சுமார் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

விழா நடைபெறும் இடம் மலையை ஒட்டியுள்ள பகுதி என்பதால், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால், அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப்பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...