Tuesday, February 21, 2017

சட்டப்பேரவை வாக்கெடுப்பு: உயர் நீதிமன்றம் இன்று விசாரணை


தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டதாகவும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு சிறைக் கைதிகளைப் போல் பேரவைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், மனசாட்சிப்படி எந்த எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால், மீண்டும் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த வழககு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...