மாவட்டத்தில் வெளுத்து கட்டியது மழை
பதிவு செய்த நாள்13செப்
2017
23:21
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டையில் நேற்று அதிகாலை முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதில் பூக்கடை பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அருகில் உள்ள தெருக்களில் வெள்ளம் தேங்கியது. பஜார்களில் உள்ள பிரதான மெயின் வாறுகால்களில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல வழியின்றி, ரோட்டில் தேங்கி, வெள்ளக் காடாக உள்ளது.
இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மழை பெய்தவுடன் பூக்கடை பஜார் பகுதிகளில் அதிக அளவில் மழை வெள்ளம் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
இப்பகுதிகளில் உள்ள வாறுகால்களை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி: சிவகாசியில் கடந்த ஒருவாரமாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் நிலங்களை உழவு செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் சிவகாசி நகர், திருத்தங்கல், கிராமப்புறங்களில் சாரல் மழை பெய்தது. இரவு வரை மழை நீடித்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். ஒரு வாரமாக தொடர் மழையின் எதிரொலியாக
பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது போல் விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.
பதிவு செய்த நாள்13செப்
2017
23:21
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டையில் நேற்று அதிகாலை முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதில் பூக்கடை பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அருகில் உள்ள தெருக்களில் வெள்ளம் தேங்கியது. பஜார்களில் உள்ள பிரதான மெயின் வாறுகால்களில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல வழியின்றி, ரோட்டில் தேங்கி, வெள்ளக் காடாக உள்ளது.
இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மழை பெய்தவுடன் பூக்கடை பஜார் பகுதிகளில் அதிக அளவில் மழை வெள்ளம் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
இப்பகுதிகளில் உள்ள வாறுகால்களை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி: சிவகாசியில் கடந்த ஒருவாரமாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் நிலங்களை உழவு செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் சிவகாசி நகர், திருத்தங்கல், கிராமப்புறங்களில் சாரல் மழை பெய்தது. இரவு வரை மழை நீடித்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். ஒரு வாரமாக தொடர் மழையின் எதிரொலியாக
பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது போல் விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.
No comments:
Post a Comment