Thursday, September 14, 2017

சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர்

பதிவு செய்த நாள்
செப் 13,2017 21:45




சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக, ஹலிமா யாகப், 63, போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார்.

ஆசிய நாடான சிங்கப்பூரில், அதிபர் பதவிக்கான தேர்தல், இந்த மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக, இந்தத் தேர்தலில், மலாய் பிரிவினர் மட்டுமே போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 55 லட்சம் மக்கள் தொகை உடைய சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு, மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில் சாலேஹ் மரிகன், பாரித் கான் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, முஸ்லிம் மலாய் பிரிவைச் சேர்ந்த, ஹலிமா யாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகரான யாகப், நாட்டின் முதல் பெண் அதிபராகி உள்ளார். தேர்தல் நடத்தப்படாமலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகவலைதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...