Sunday, September 17, 2017

இறந்தவர்களுக்கு டிக்கெட்வாங்கிய ரயில் பயணியர்
பதிவு செய்த நாள்16செப்
2017
20:08

ஜபல்பூர், : மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் இருந்து செல்லும் ரயிலில், இறந்தவர்களுக்கும் டிக்கெட் வாங்கி செல்லும் பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் ஆச்சரியமடைந்தனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜபல்பூரில் இருந்து பீஹார் மாநிலத்தில் உள்ள, இந்து, ஜைனர்கள் மற்றும் புத்த மதத்தினரின் புண்ணிய தலமான, கயாவுக்கு செல்லும் ரயிலில், சோதனையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்து வருகிறது.

ஜபல்பூரில் இருந்து, கட்னி, சத்னா, ரீவா மற்றும் இடாரசி ரயில் நிலையங்களுக்கு இடையில், எட்டு மணி நேரம் நடந்த சோதனையில், இறந்த மூதாதையரின் பெயரில் டிக்கெட் எடுத்த பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் வியந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணியர், பொது மற்றும் படுக்கை வசதி டிக்கெட்டுகளை வாங்கியது தெரியவந்தது.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:தற்போது, பித்ருபட்சம் என்னும், 'மஹாளயபட்சம்' நடக்கிறது. அப்போது, பித்ருலோகத்தில் இருக்கும் நம் மூதாதையர், பூமிக்கு நம்மை பார்க்க வருவதாக ஐதீகம். பீஹாரில் உள்ள கயாவில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய செல்வதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒரு பயணி, 100 ஆண்டுகளுக்கு முன் இறந்த மூதாதையருக்கு டிக்கெட் வாங்கியதாக கூறினார்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...