Tuesday, September 19, 2017

மாணவர்கள் உடல் பருமன் கூடுகிறது; சீருடை அளவு பெரிதாகிறது

சிங்கப்பூர் மாணவர்களிடையே உடல் பருமன் கூடிவருவதன் காரணமாக பள்ளிக்கூடச் சீருடை அளவு பெரிதாகி வருகிறது. இந்தத் தொழில்துறையில் 50 ஆண்டு காலமாக இருந்து வரும் ஷங்காய் ஸ்கூல் யுனிஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி டோரிஸ் இயோ, “நம்முடைய மாணவர்கள் அளவில் பெருத்து வருகிறார்கள். இப்போது அவர்களுக்குத் தோதாக உடைகளைப் பெரிதாக தைக்க வேண்டியிருக்கிறது,” என்று கூறினார். குறிப்பாக கால்சட்டைகளைப் பெரிதாகத் தைக்க வேண்டியிருக்கிறது என்றார் அவர். சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களிடையே உடல்பருமன் விகிதம் அதிகமாகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் 10% ஆக இருந்த அந்த விகிதம், 2014ல் 12% ஆகியது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...