Friday, February 10, 2017

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர் வித்யாசாகர் ராவ்

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பினார் கவர்னர். தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை இன்று முதல்வர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக சந்தித்தனர்.

சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமர், மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி ஆகியோருக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவர்னரிடம் இருந்து விரிவான மற்றொரு அறிக்கை பெற்ற பின்னரே இறுதி தெரிய வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் சாசன விதிப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய உள்துறை
ள்அமைச்சர் ராஜ்நாத்சிங்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.08.2026