Friday, February 10, 2017

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை கண்காணிப்பு

DINAMALAR

சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, பெரும் தொகை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளதால், அவர்களை, வருமான வரித்துறை கண்காணிக்க துவங்கி உள்ளது.சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம், போர்க்கொடி துாக்கி உள்ளார். இதனால், கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் பதவியை பெற துடிக்கும் சசிகலா, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்துக் கொள்ள, கோடிக்கணக்கான ரூபாய் வழங்கி உள்ளதாக, தகவல் பரவி உள்ளது. அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, கண்காணிக்க துவங்கி உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 16.08.2026