Thursday, September 14, 2017

மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தை

Published : 14 Sep 2017 08:27 IST

புவனேஸ்வரம்

மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க தனது 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தையை போலீஸார் கைது செய்துள் ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் முகி. இவரது மனைவி சுகுடி. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். மூன்றாவதாக கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் சுகுடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார் பலராம். தகவல் அறிந்த போலீஸார் பலராம் முகியை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து பத்ராக் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பலராம் முகிக்கு நிரந்தர வருமானம் இல்லை. அத்துடன் குடிப்பழக்கமும் உள்ளவர். அதனால் 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தில் ரூ.2 ஆயிரத்தில் செல்போன், மகளுக்கு ரூ.1,500-ல் வெள்ளி கொலுசு, மனைவிக்கு புடவை ஆகியவற்றை வாங்கி உள்ளார். மீதி பணத்தில் மது வாங்கி உள்ளார். இதுகுறித்து பலராமின் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.

குழந்தையை விற்க பலராமின் மைத்துனர் பாலியாதான் உதவி செய்துள்ளார். இவர் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். சோம்நாத் சேத்தி என்பவர் அரசு ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய 24 வயது மகன் கடந்த 2012-ம் ஆண்டு இறந்துள்ளார். ஒரே மகனை பறி கொடுத்த சோகத்தில் சோம்நாத் சேத்தியின் மனைவி மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

ஆண் குழந்தையைத் தத்தெடுத்தால் அவருடைய மனநிலை மாற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். அதை அறிந்த பாலியா, பலராமிடம் பேசி குழந்தையை விற்க ஏற்பாடு செய்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு கூறினார்.- ஏஎன்ஐ

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...