Saturday, September 23, 2017

தமிழகத்தில் பல இடங்களில் மருத்துவக் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்



தமிழகத்தில் பல இடங்களில் மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

செப்டம்பர் 23, 2017, 03:15 AM
சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளஞ்சிசு தீவிர பராமரிப்பு மையத்துடன் கூடிய மகப்பேறு பிரிவுக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுக் கட்டிடம்; பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், நீலகிரி மாவட்டம் டி.ஓரநல்லி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள்;

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம், தர்மபுரி மாவட்டம் கே.என்.ஹள்ளி மற்றும் செல்லமுடி, விழுப்புரம் மாவட்டம் ஆரம்பூண்டி மற்றும் எரையூர் ஆகிய ஐந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் என மொத்தம் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் கிராமத்தில், 7 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் 5 ஆயிரத்து 102 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகக் கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார். இந்த அலுவலகம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 17 பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும், 31 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய- மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் வாயிலாக 16 ஆயிரத்து 209 பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...