Wednesday, October 18, 2017

பிரியாணி நெல் சாகுபடி : விவசாயிகள் மகிழ்ச்சி





திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும், 1,500 ஏக்கர் நிலத்தில், பிரியாணிக்கு உகந்த அரிசி ரகமான சீரக சம்பா நெல் வகை சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில், இங்கு மட்டும் தான் சீரக சம்பா
நெல் ரகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சீரக சம்பா நெல் ரகம் சாகுபடி செய்ய, அங்குள்ள பெரிய ஏரியான ஜம்பேரியின் தண்ணீர் தான், பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஏரி கடந்த, 10 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பவில்லை. இதனால், சீரக சம்பா நெல்
சாகுபடியும், கடந்த சில ஆண்டுகளாக குறைந்தே இருந்தது. இந்நிலையில், பச்சமலையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து
வருவதால், வைரிசெட்டிப் பாளையத்தில் உள்ள ஜம்பேரி, நேற்று முன்தினம் காலை, முழுமையாக நிரம்பி வழிந்தோடியது.
மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றாக ஜம்பேரி நிரம்பி விட்டதால், இந்த ஆண்டு சீரக சம்பா சாகுபடியை பிரச்னை இன்றி முடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY