Friday, February 17, 2017

சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால், அவருக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

பெங்களூரு சிறையில்..

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதாரண அறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால் முதல் வகுப்பு அறைக்கு மாற வாய்ப்பு உள்ளது.

வசதிகள்:

முதல் வகுப்பு அறையில் மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி உண்டு. தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரத்துக்கு இரு முறை அசைவ உணவு உண்டு. காலை உணவாக சப்பாத்தியும், அரை லிட்டர் சாம்பார் மற்றும் கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி, ராகி கிடைக்கும். இதில் பிடித்தமான ஒன்றை அவர் தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025