Thursday, February 23, 2017

 அமெரிக்க குடியேற்ற விதிகளில் கட்டுப்பாடு: 3 லட்சம் இந்தியர்களை பாதிக்க வாய்ப்பு

By DIN  |   Published on : 23rd February 2017 01:30 AM  |
உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் தங்கி பணியாற்றுபவர்கள், கல்வி பயில்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றச் சலுகைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டது.
அதற்காக குடியேற்றச் சட்டத்தில் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு ஆயத்தமாகி வருகிறது.
இதன் விளைவாக 3 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமெரிக்கவாழ் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றச் சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள், சொந்த நாட்டில் வாழ்வுரிமை அச்சுறுத்தல் இருப்பவர்கள் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைவரும் புதிய குடியேற்றச் சட்டத்தின்படியே அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும்.
சட்டவிரோதமாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் தங்கியிருக்க எவருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு விதிகளுக்குப் புறம்பாக அமெரிக்காவில் வசிப்பவர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.1 கோடி பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...