Tuesday, February 14, 2017

கூவத்தூர் ரிசார்ட்டில் நள்ளிரவில் அதிகமான போலீஸார் குவிப்பு

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டைச் சுற்றி அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூவத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ரிசார்ட்டுக்கு வந்த சசிகலா நேற்று அங்கேயே தங்கினார். கூவத்துாரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025