Wednesday, February 22, 2017

நீதிக்காக இறுதிவரை போராட இருக்கும் பாவனா!

By எழில்  |   Published on : 22nd February 2017 10:45 AM  | |  
bhavana1xx1

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது கார் எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் பாவனா காரை வழிமறித்தது. வேனில் இருந்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரைத் தாக்கி பாவனாவை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது பாவனாவை துன்புறுத்தி, அந்த காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். பிறகு, காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து, காக்கநாடு பகுதியில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று பாவனா உதவி கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் அழுத்தங்களால் நடிகை பாவனா இந்த வழக்கை திரும்பப் பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் பாவனாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரிமா கலிங்கல் இதை மறுத்துள்ளார்.
தன்னுடைய ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது: எல்லோருக்கும் பரபரப்பான கதைகள்தான் தேவைப்படுகின்றன. எல்லோருக்கும் சில பெயர்களை சொல்லவேண்டும் என்கிற ஆவல் உள்ளது. ஆனால் யாருக்கும் உண்மை அவசியமில்லை. அவர் கடைசிவரை இதற்காகப் போராடுவார். மனிதம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் அவருக்குத் துணையாக இருப்பார்கள் என்று பதிவு எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...