Monday, February 13, 2017


'ஆயிரம் பன்னீர்செல்வத்தை பார்த்திருக்கிறேன்'- சசிகலா பரபரப்பு பேச்சு
VIKATAN



தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.



'நான் நினைத்திருந்தால் எப்போதோ முதலமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், அந்த நினைப்பு ஒரு நொடி கூட எனக்கு எழவில்லை. எம்.ஜி.ஆர் இறந்த போது அவர் இறுதி ஊர்வல வண்டியில் ஏற விடாமல் ஜெயலலிதாவைத் தடுத்து தள்ளிவிட்டபோது, அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அரசியலை விட்டே ஜெயலலிதா விலகலாம் என்று நினைத்தார். அதை பலமுறை என்னிடம் ஜெயலலிதா கூறியுள்ளார். நான்தான் அவருக்கு ஊக்கம் கொடுத்து அரசியலில் தொடர வைத்தேன். ஒரு பன்னீர்செல்வம் அல்ல, ஆயிரம் பன்னீர் செல்வத்தை நான் பார்த்திருக்கிறேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. 33 ஆண்டுகளாக நான் ஜெயலலிதாவுடன் இருந்ததால் பயமே இல்லாமல் போனது. தி.மு.க.வுடன் பன்னீர்செல்வம் மிகவும் இணக்கமாக சென்றது தவறாக தோன்றியது. அந்த காரணத்தினாலேயே நான் முதல்வராக முடிவு செய்தேன்' என்று கூறினார்.



மேலும்,’தொண்டர்கள் இருக்கும்வரை அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. அதிமுகவை பிரிக்க முடியாது. அன்று முதல் இன்று வரை பல சோதனைகளைக் கடந்துதான் வந்திருக்கிறோம். எதிரிகளை சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது’ என்று பேசினார்.

படங்கள் : காளிமுத்து




No comments:

Post a Comment

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...