Saturday, February 18, 2017

அழிக்க நினைத்தவர்கள் இன்று..! பன்னீர்செல்வத்தை விளாசும் முதல்வர் பழனிசாமி!




தி.மு.க.வுடன் கூடிக்குலாவி இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடியுள்ளார்.

சட்டமன்றத்தை முடக்கி ரகளை செய்து வாக்கெடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு திமுக உறுப்பினர்கள் வந்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அராஜகத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மீது சபாநாயகர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் என்று நிரூபித்திக்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தி.மு.க.வுடன் கூடிக்குலாவி இருக்கும் காட்சி சட்டமன்றத்திலேயே அனைத்து தொலைக்காட்சியிலும் வந்துள்ளது. ஜெயலலிதாவின் தீர்ப்பு பற்றி திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்தபோது, இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒருவர் கூட எதிர்த்துப் பேசவில்லை. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா எடுத்த சபதம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக குடிநீர் பிரச்னை முழுவதுமாக தீர்க்கப்பட வேண்டும். 140 ஆண்டுகால வறட்சி தமிழகத்தில் நிலவி வருகிறது. பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால் நீர்நிலைகள் எல்லாம் வறண்டு கிடக்கிற காரணத்தினால் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று கூறினார்

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...