Monday, February 13, 2017

கூவத்தூரில் சசி ஆட்கள் அட்டகாசம் : பத்திரிகையாளர்கள் சாலை மறியல்

கூவத்துார்: கூவத்துார் சொகுசு விடுதிக்கு சசிகலா சென்ற போது, பத்திரிகையாளர்களை, அவரது குண்டர்கள் தடுத்து, ரகளை செய்ததால், மறியலில் ஈடுபட்டனர்.சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் சொகுசு விடுதியில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரண்டாவது நாளாக, நேற்று மாலை, 4.50 மணிக்கு, சசிகலா அங்கு சென்றார். பத்திரிகையாளர்கள் அங்கு சென்ற போது, அவர்களை குண்டர்கள் தடுத்து நிறுத்தினர்; மிரட்டினர். அவர்களுடன், பத்திரிகையாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வேடிக்கை பார்த்தனர். பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக, உள்ளூர் மக்கள் திரண்டதும், குண்டர்கள் தப்பினர். அப்போது, ஒருவர், பத்திரிகையாளரின் மொபைல் போனை பறித்து சென்றார். இதை கண்டித்து, பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த, அ.தி.மு.க., பிரமுகர்கள், மொபைல் போனை திரும்ப ஒப்படைத்தனர்; பின், மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து, தமிழக, டி.ஜி.பி., அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு கூடுதல், ஐ.ஜி., திருநாவுக்கரசிடம், பத்திரிகையாளர்கள் புகார் கூறினர். அப்போது, 'குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

Self-financing medical, dental college fee details released

Self-financing medical, dental college fee details released The Hindu Bureau Chennai. 16.08.2026 Tamil Nadu’s Selection Committee has put up...