Monday, February 13, 2017

பன்னீரைத் தேடி எம்.பி.,க்கள் செல்வது ஏன்? மத்திய அரசில் அமைச்சர் பதவி பெற திட்டம்

வெறும் எம்.பி.,க்களாக உங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனரே, அதை வைத்து இப்போதைய நிலையில் என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், எம்.எல்.ஏ.,க்கள்தானே தேவை என்று பன்னீர்செல்வத்தின் பக்கம் உள்ள, அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், எம்.எல்.ஏ.,க்களை அடைத்த் வைத்துள்ளனர். அவர்களை சுதந்திரமாக வெளியே விட்டால், அவர்கள் அனைவரும், பன்னீர்செல்வத்தைத் தேடி வந்துவிடுவர். சட்டசபையில், ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை ஓட்டெடுப்பில், தனது ஆதரவை நிரூபிப்பார். அதனால், அதற்காக காத்திருக்கிறோம்.
இதற்கிடையில், எம்.பி.,க்கள் ஆதரவை திரட்டி வருகிறோம். எப்படியும் 25க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பன்னீர்செல்வம் பக்கம் வந்து விடுவர். அதை வைத்து, விரைவில், மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவளிப்போம். அப்படி செய்வதன் மூலம், பிரதமர் மோடி, பா.ஜ., அரசில், பன்னீர்செல்வம் எம்.பி.,க்களையும் சேர்த்துக் கொள்வார். அமைச்சரவையில், இரண்டு கேபினட் ரேங்கில் அமைச்சர்கள், ஒரு இணையமைச்சர் பொறுப்பும் வழங்க, தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், தமிழகத்துக்கு கூடுதல் நன்மை கிடைக்கும். அதனாலேயே, சசிகலா பக்கம் இருந்த எம்.பி.,க்கள் அனைவரும், பன்னீர்செல்வத்தை தேடி வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025