Monday, February 13, 2017

தொடர்பு எல்லைக்கு அப்பால் எம்.எல்.ஏ.,க்கள்! - சமூக வலைதளங்களை நாடும் வாக்காளர்கள்

கோவை : எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்ள முடியாத விரக்தியில் உள்ள தொகுதி மக்கள், 'வாட்ஸ்அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், தங்கள் எச்சரிக்கை எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், ஒன்பது தொகுதிகள் அ.தி.மு.க., கைவசம் உள்ளது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

'சுவிட்ச்ஆப்'

மற்ற தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் எங்கு உள்ளனர் என மக்கள் தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்களின் மொபைல்போன்கள் எண்கள், 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சமூக வலைதளத்தில் கருத்து

தொகுதி மக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினரும், வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்களை தேடி வரும் மக்கள், அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், விரக்தி அடைந்துள்ளனர். இதனால், தற்போது 'பேஸ்புக்', 'வாட்ஸ்அப்' மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கு தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

சூடு சொரணை இருந்தால் ராஜினாமா செய்யுங்கள்

அதில்,'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக தான் உங்களுக்கு வாக்களித்தோம். தற்போது நீங்கள், அம்மாவை கொலை செய்த கும்பலுக்கு துணையாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அதனால், எம்.எல்.ஏ., வாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நாங்கள் அளித்த ஓட்டுக்களை திரும்ப பெறுகிறோம். உடனே, சூடு சொரணை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிடுங்கள்' என, தெரிவித்துள்ளனர்.

சூலுார், கிணத்துக்கடவு தொகுதி மக்கள், 'நீங்க யாருன்னு தெரியாமலே நாங்க ஓட்டு போட்டு ஜெயிச்சதுக்கு, ஜெயலலிதாதான் காரணம். நீங்க கொலைகார கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டீங்கனு நம்புறோம். அப்படி செஞ்சீங்கன்னா நாங்க அடுத்த தேர்தலில் உங்கள சும்மா விடமாட்டோம்' என, தங்கள் எம்.எல்.ஏ.,க்களை எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Self-financing medical, dental college fee details released

Self-financing medical, dental college fee details released The Hindu Bureau Chennai. 16.08.2026 Tamil Nadu’s Selection Committee has put up...