Thursday, February 23, 2017

வங்கி ஏடிஎம்.மில் ரூ.2,000 போலி நோட்டுகள்!

By DIN  |   Published on : 23rd February 2017 02:17 AM  |   
fake
தில்லியின் சங்கம் விஹார் பகுதியிலுள்ள வங்கி ஏடிஎம் ஒன்றில், "சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா' என்று அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது: ரோஹித் குமார் என்ற நபர், சங்கம் விஹார் பகுதியிலுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-மில் கடந்த 6-ஆம் தேதி பணம் எடுத்துள்ளார். அவருக்கு, 4 போலி ரூ.2,000 நோட்டுகள் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, ரோஹித் குமார் போலீஸாரை அணுகினார்.
அந்த போலி நோட்டுகளில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்குப் பதிலாக சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆர்பிஐ குறியீட்டுக்கு பதிலாக பி.கே. என்று குறியீடு இருந்தது. ரூபாய் சின்னம் இல்லை. மேலும், ரூபாய் நோட்டின் வலது ஓரத்தில் "வாட்டர் மார்க்' பகுதியில் "சுரான் லேபிள்' என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதனிடையே, அந்த ஏடிஎம் மையத்துக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டார். அவர் பணம் எடுத்தபோதும், அதேபோன்ற ரூபாய் நோட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, மோசடி தடுப்புச் சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட ஏடிஎம்-மில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், அதில் கடைசியாக பணம் நிரப்பிய நபரை அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். இதுபோல், வேறெந்த நபரிடம் இருந்தும் எங்களுக்கு புகார்கள் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அந்த அதிகாரி.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...