Tuesday, February 14, 2017

இடமாறும் இதயங்கள்! ஆஹா இது தான் காதல் என்பதா?

இதயங்கள் இடமாறும்... வார்த்தைகள் தடுமாறும்... பார்ப்பதெல்லாம் புதிதாய் தெரியும்... சிந்தனைகளுக்கு சிறகு முளைக்கும், இது காதலா... இல்லை சாதலா என, குளிரும் நினைவுகளில் கொதிக்கும் உணர்வுகள்...
இங்கே மனம் திறக்கும் மதுரையை சேர்ந்த காதலர்களுக்கு இன்று மட்டுமல்ல தினம், தினம் காதலர் தினம் தானோ...

காதலுக்கு மரியாதை கொடுங்கள்

காதலர்களாக இருந்து கணவன், மனைவியாக மாறும் போது 'ஈகோ' இல்லாமல் இருந்தால் தான் அந்த காதலுக்கு மரியாதை. அந்த வகையில் எங்களுக்குள் இதுவரை 'ஈகோ' பிரச்னை வந்ததில்லை. காதலித்த 5 ஆண்டுகளில் ஒருவரை, ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். அதற்கு பின் தான் வீட்டில் அனுமதி கேட்டு, அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தோம். காதல் என்பது இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டது இல்லை, அது இந்த சமூகம் சார்ந்தது. அதனால், காதல் திருமணத்திற்கு கண்டிப்பாக பெற்றோர் சம்மதம் தேவை. இதை உணர்ந்தால் ஒவ்வொரு காதலர்களும் வாழ்வில் சந்தோஷமாக ஒன்றுசேரலாம்.

ஆர்.பிரதீப் குமார், எஸ்.விசாலாட்சி

காதலில் பொறுமை அவசியம்

'கண்ணும் கண்ணும் மோதும்மா... நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்...' என்ற, பாடல் வரிகளை போல நாங்கள் வார்த்தைகளால் பேசியதை விட, கண்களால் பேசிய நாட்களே அதிகம். ஏதோ ஒரு சூழ்நிலையில் நாங்கள் அடிக்கடி சந்தித்தோம், காலப்போக்கில் ஒருவரை, ஒருவர் காதலாய் சிந்தித்தோம். இப்படி 7 ஆண்டுகளாக காதலாகி கசிந்து உருகி, திருமணத்திற்காக வீட்டில் சம்மதம் கேட்டோம். எதிர்பார்த்தது போல, கவுரவம் காட்டி எதிர்ப்பு வந்தது, பொறுமையுடன் எங்கள் உண்மை காதலை நிரூபித்தோம், சம்மதம் கிடைத்தது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து போவதால், காதல் வாழ்க்கை இனிப்பாகவே இருக்கிறது. உண்மையான காதல் எப்போதும் வெற்றி பெறும் என்பதற்கு நாங்கள் ஒரு உதாரணம்.

எஸ்.ஜெயகுமார், ஜெ.கீதா

கோவை டூ மதுரை காதல்

''பள்ளி நாட்களில் கோவையில் இருந்து மதுரையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால், அது அவர் மனதில் தான் முதலில் காதலாகி இருக்கிறது. 10ம் வகுப்பு படிக்கும் போது திடீரென ஒரு நாள் உன்னை கல்யாணம் செய்யட்டுமா என சொல்லவும் எனக்கு 'திக்... திக்...' என ஆகிவிட்டது. அப்புறம் என்ன 7 வருஷம் பெற்றோருக்கு தெரிந்தும், தெரியாமலும் எங்கள் காதல், கடிதத்திலும் போனிலும் தொடர்ந்து திருமணத்தில் முடிந்தது. இப்போது 2 பிள்ளைகளுடன் சந்தோஷமான வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது,'' என்கிறார் மினி. '' சின்ன வயசிலே எதையும் 'பாசிட்டிவ்வாக' பேசுவதை கவனித்தேன். அது எனக்கு பிடித்தது. நான் கல்லுாரியில் முதலாண்டு படிக்கும் போது என் காதலை சொன்னேன். 'கிரீன் சிக்னல்' கிடைத்தாலும் திருமணத்திற்கு சிக்கல்கள் இருந்தது. அதை கடந்து விட்டோம். வேலை கிடைத்த பின் திருமணம், அந்த நாள் ஆத்மார்த்தமான காதலை நினைத்தால் இப்போதும் பிரமிப்பாக இருக்கிறது,'' என்கிறார் பிரவின்குமார்.


பிரவின்குமார், மினி

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...