Tuesday, February 14, 2017


ஏ.டி.எம்., ரகசிய எண் கொடுக்காதீங்க! : 'மாஜி' ஏமாந்தார்: ரூ.1.70 லட்சம் போச்சு
கடலாடி: 'ஏ.டி.எம்., கார்டு ரகசிய எண்ணை யாராவது போனில் கேட்டால் சொல்ல வேண்டாம்' என, வங்கி அதிகாரிகள் வாய் வலிக்க கத்தினாலும் ஏமாறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் சாமானியர் ஏமாந்தால் பரவாயில்லை. முன்னாள் அமைச்சர் ஒருவரும், 1.70 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனுாரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 1991 - 96ல் அ.தி.மு.க., அமைச்சராக இருந்தார். தற்போது, தி.மு.க.,வில் தீர்மானக் குழு துணைச் செயலராக உள்ளார். நேற்று முன்தினம் இவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், 'வங்கி ஊழியர்' என அறிமுகப்படுத்திக் கொண்டார். 'உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் ஏ.டி.எம்., கார்டு காலாவதியாக உள்ளதால், அதை புதுப்பிக்க ரகசிய எண்ணை கூறுங்கள்' எனக் கேட்டார்; சத்தியமூர்த்தி, ரகசிய எண்ணை கூறினார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 1.70 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக அலைபேசியில் தகவல் வந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

கடலாடியில் கடந்த வாரம் ஆசிரியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து, 'போலி' ஏ.டி.எம்., கார்டு மூலம், 47 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...